News May 4, 2024

ஆட்சியமைத்த உடனேயே வேளாண் கடன் தள்ளுபடி

image

I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்ததும் முதல் நடவடிக்கையாக வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, வேளாண் கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை மோசடி செய்து விட்டதாகவும், ஆனால், பெரும் தொழிலதிபர்களின் ₹16,000 கோடி கடனை தள்ளுபடி செய்து விட்டதாகவும் விமர்சித்தார்.

Similar News

News November 17, 2025

ஈரோடு: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் பெண்கள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும்,சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்புக்கு இலவச தொலைபேசி எண். 1930 அழைக்கவும்

News November 17, 2025

பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

image

மேற்கு வங்​கத்​தில் TMC தொண்​டர்​களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை​ பாஜக​வினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்​யாண் பானர்​ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்​களுக்கு அடைக்​கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்​டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்​யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்​ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.

News November 17, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

image

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!