News May 6, 2024
நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து

கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்த ஆண்டு அக்.14ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவே மக்கள் பயணித்ததன் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 13 முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
Similar News
News March 13, 2026
சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
News March 13, 2026
MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.
News March 13, 2026
இந்த வயதில் முதலீடு ரொம்ப முக்கியம்!

பொதுவாக 40-50 வயதுக்குள் எடுக்கப்படும் நிதி முடிவுகள் ஒருவரின் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அந்த வயதில் வேலை மாறும்போது PF-ஐ திரும்பப் பெற வேண்டாம் என்றும், அவசரமாக ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வாங்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத சொத்துக்களில் முதலீடு செய்யும்படியும் அறிவுறுத்துகின்றனர்.


