News August 4, 2024

ஓராண்டுக்குப் பின் கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி

image

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவர் உள்பட 17 பேரால் நிர்வாணமாக வீதியில் நடக்கவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. அப்பெண்ணின் கணவர் உள்பட 14 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

‘ஜன நாயகன்’ மறு ஆய்வுக்கு கால தாமதம் ஆனது ஏன்?

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு செய்வது குறித்து எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மறு ஆய்வுக்கு 20 நாள்களில் குழு அமைக்க வேண்டும் என சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்க மறுத்தால் ஐகோர்ட்டை நாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

News January 20, 2026

PM KISAN திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

image

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 (ஆண்டுக்கு ₹6,000) வழங்கி வருகிறது. அதனை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, ₹9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் PM KISAN திட்ட தவணைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம்.

News January 20, 2026

விஜய்யை சீண்டிய சிவி சண்முகம்

image

கார், பங்களா, வீடு தருகிறோம் என புதிதாக அரசியலுக்கு வந்த ஒருவர் கூறுகிறார். அதை ட்ரம்ப் கூட கொடுக்க மாட்டார் என விஜய்யை அதிமுகவின் சிவி சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், இன்றைக்கு கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என பலர் வந்தாலும், ஒரே எம்ஜிஆர் எங்கள் எம்ஜிஆர் மட்டும்தான் எனவும், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா என சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!