News August 4, 2024
ஓராண்டுக்குப் பின் கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவர் உள்பட 17 பேரால் நிர்வாணமாக வீதியில் நடக்கவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. அப்பெண்ணின் கணவர் உள்பட 14 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?
News March 20, 2026
CPI கட்சியால் CPM அதிருப்தியா?

காங்.,க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கிய திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு இரண்டு இலக்க சீட்டை கொடுக்க தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு காங்., தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், CPI கட்சி 5 சீட்களுக்கு ஒப்புக்கொண்டதால், CPM அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 20, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு பேசிய EPS கூறியுள்ளார். திமுகவும் ஓரிரு நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 5 சவரன்(40 கிராம்) வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.


