News April 16, 2024
ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன எனக் கூறினார்.
Similar News
News November 16, 2025
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கும் பணிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள், நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தன. இந்நிலையில், விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிச.15 முதல் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News November 16, 2025
RR-ல் இணைவது ஜடேஜா எடுத்த முடிவுதான்

CSK-ல் இருந்து விலகி RR-ல் இணைவது ஜடேஜா எடுத்த முடிவுதான் என அணி உரிமையாளர் மனோஜ் படாலே தெரிவித்துள்ளார். 4 வாரங்களுக்கு முன் ஜடேஜா தன்னை தொடர்பு கொண்டதாகவும், RR அணிக்கு திரும்ப விருப்புகிறேன் என கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பிறகே அனைத்து வேலைகளும் தொடங்கியதாக அவர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தோனியின் ஆலோசனைப்படியே ஜட்டு விலகுவதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 16, 2025
EPS சிங்கம், பாஜக புலி: KT ராஜேந்திர பாலாஜி

சிங்கம்-புலி கூட்டணியாக ADMK – BJP கூட்டணி உள்ளதாக KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிங்கமாக EPS-ம் புலியாக BJP-யும் உள்ளனர் என்ற அவர், EPS வீட்டை நோக்கி ஜனவரியில் எத்தனை கட்சி தலைவர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக என்ற கட்சியை சட்டமன்றத்திற்குள் நுழைய வைக்காமல் இருக்க தேவையான தேர்தல் உத்திகளை EPS மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


