News April 16, 2024
ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன எனக் கூறினார்.
Similar News
News December 9, 2025
வங்கி கடன் தள்ளுபடி… அரசு வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ₹6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என பார்லிமென்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் போகும் கடன்கள் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். இதற்கு, லோன் காசை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தமல்ல. வங்கிகள் தொடர்ந்து இக்கடன்களை திரும்பப் பெற முயற்சிகள் எடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்

இந்திய தேசிய மகளிர் ஆணையம், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் 31 நகரங்களில் (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


