News April 8, 2024
ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் பேருக்கு அரசு வேலை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் முதல் நடவடிக்கையாக 30 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படுமென காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ம.பி.,யின் சியோனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பாஜகவினர் அதை உங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலை தருகின்றனரே தவிர, அரசு வேலையை தரவில்லை எனவும் சாடினார்.
Similar News
News July 7, 2025
பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை விளாசிய மோடி

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது என பிரிக்ஸ் மாநாட்டில் PM மோடி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், தீவிரவாத தடுப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு காஸா நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
தூத்துக்குடி மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு லீவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News July 7, 2025
டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ

‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.