News May 15, 2024

12 மணி நேர போராட்டத்திற்கு பின் 14 பேரும் மீட்பு

image

ராஜஸ்தானில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கத்தில் நேற்றிரவு லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் சிக்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் 12 மணி நேரத்திற்கும் மேல் போராடியதில், 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

Similar News

News March 15, 2026

தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுங்க

image

▶கருவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம், வைட்டமின்கள், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. ▶கண்புரை நோய் வராமல் தடுத்து, பார்வையை மேம்படுத்த உதவும். ▶இன்சுலின் உற்பத்தி ஆக உதவுவதோடு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். ▶மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாய்வு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ▶குறிப்பாக, தொப்பையை குறைக்க உதவும் என டாக்டர் கூறுகின்றனர்,

News March 15, 2026

விஜய்யிடம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையா?

image

விஜய்யிடம் பாஜக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, பத்திரிகையாளர்களுக்கு தெரிந்த தகவல் கூட தனக்கு தெரியாது என கூறினார். மேலும், விஜய்யின் டெல்லி பயணத்தையும் கூட்டணியையும் முடிச்சுப் போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 15, 2026

ஒரே நாளில் 88 லட்சம் கேஸ் சிலிண்டர் புக்கிங்!

image

எங்கு நமக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர். கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் மக்களின் அச்சம் குறையவில்லை. நேற்று முன்தினம் மட்டும் 88 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் புக் செய்யப்பட்டதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி கேஸ் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!