News August 18, 2024

விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

image

நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கனமழை, சூறாவளி காற்று, இடி மின்னல் அதிகமாக இருந்தால் அவற்றிலிருந்து சமாளிக்க ஏதுவாக அனைத்து செயற்பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 23, 2025

நெல்லை: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களே; உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான புகார்கள் இருந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் உதவி எண் ஆகும். மாணவர்களின் கல்வி சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். *ஷேர் செய்யுங்கள்*

News August 23, 2025

சுவரில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க நடவடிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் பூங்காக்கள், மேம்பாலங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டு, சமூக நீதி வாசகங்கள் எழுதப்படுகின்றன. திறந்தவெளி சிறுநீர் கழிக்காத மாநகரமாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. பாளை அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திமதி பள்ளி சுவரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர், மாந்திரீக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் சிரிப்பையும் சிந்தனையும் ஏற்படுத்தி உள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

நெல்லை: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!