News April 16, 2024
பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
என்னை கத்தி கத்தி சாக விடாதீர்கள்: சீமான்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் உருப்படியான ஒரு முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று நிம்மதியாக சாகவிடுங்கள் அல்லது தன்னிடம் தமிழகத்தை கொடுத்து வாய்ப்பளியுங்கள் என சீமான் கூறினார். மேலும் 15 ஆண்டுகளாக மக்களுக்காக கத்திவிட்டேன்; என் பாவமே உங்களை சும்மா விடாது என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
பூத் ஏஜெண்ட் ஆக இருப்பேன்: அண்ணாமலை

சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஓட்டுப்பதிவு(ஏப்.23 ) நாளன்று முதல் ஆளாக வாக்கு செலுத்திவிட்டு, அதன்பிறகு ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜெண்ட் ஆக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: வினைத்தூய்மை
▶குறள் எண்: 652
▶குறள்: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
▶பொருள்: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.


