News December 5, 2024
இனி ஆண்டிற்கு இருமுறை மாணவர் சேர்க்கை

புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர்க்கல்வி சேர்க்கை பின்பற்றப்படும் என UGC அறிவித்துள்ளது. ஆண்டிற்கு இருமுறை ( ஜூன், ஆக.,மற்றும் ஜன., பிப்.,) உயர்க்கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள பல்கலை.கள், கல்லூரிகள் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். 12ஆம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால், விரும்பும் படிப்புகளில் சேரலாம்.
Similar News
News April 29, 2025
₹800 கோடி.. தோனியின் வெற்றிக்கு காரணம் இவரே!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். தோனியின் வெற்றிக்கு பின்னிருக்கும் பெண், மனைவி சாக்சி அல்ல, மாமியார் ஷீலா சிங். தோனியின் ₹800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சக்சஸுக்கு அவரே காரணம். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் CEO-வான அவர், 4 ஆண்டுகளில் நிறுவனத்தை சிகரத்தில் ஏற்றியுள்ளார். கார்ப்பரேட் நுணுக்கங்களை கணவரிடம் கற்றுக்கொண்ட ஷீலா, சாதித்தும் காட்டியுள்ளார்.
News April 29, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.
News April 29, 2025
ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.