News April 25, 2024

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

குமரியில் 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்..!

image

நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்தவர் நிகாஷ் (15). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நித்திஷ் என்பவருக்கு புத்தகம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதுகுறித்து நிகாஷ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஜன.8) வழக்குப்பதிந்து ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

News January 9, 2026

505-ல் 404-ஐ நிறைவேற்றி விட்டோம்: CM ஸ்டாலின்

image

திருவள்ளூரில், <<18778046>>’உங்க கனவ சொல்லுங்க’<<>> திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுக்கு பாலமாக இருக்க வேண்டிய கவர்னர், TN அரசு இயற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக விமர்சித்தார். மேலும், 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார். 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

News January 9, 2026

பராசக்திக்கு U/A சான்றிதழ்

image

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 15 இடங்களில் கட் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியிருந்தது. தற்போது தணிக்கை சான்றிதழ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை ரிலீசாகிறது. மேலும், தமிழகம் முழுவதும் ’பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

error: Content is protected !!