News November 23, 2024
வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே முன்னிலை

மகாராஷ்டிராவின் வொர்லி (Worli) தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை வகிக்கிறார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிண்ட் முரளி தியோரா பின்தங்கியுள்ளார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
Similar News
News December 23, 2025
விஜய் உடன் கூட்டணி.. மறைமுகமாக தெரிவித்தார்

திமுக, காங்., கூட்டணியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் அங்கமாக (ஆட்சி அதிகாரத்தில் பங்கு) இருக்க வேண்டியது அவசியம் என காங்., மேலிட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தால் விஜய்யுடன் இன்றளவும் <<18646865>>காங்கிரஸ் பேச்சுவார்த்தை<<>> நடத்துவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 23, 2025
பாஜகவின் ஆயுதம் CBI, ED: ராகுல் காந்தி

எதிர்க்கட்சியினரை குறிவைத்து இந்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவினர் மீது ஒரு வழக்கு கூட இல்லை என்றும், CBI, ED பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் கொள்கைகள் மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.
News December 23, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

டிச.31-க்குள் விரல்ரேகை பதிவு செய்யவில்லை எனில் ரேஷன் கார்டு ரத்தாகலாம் என தகவல் பரவி வருகிறது. இதனால் பொங்கல் பரிசு வாங்க முடியாமல் போகுமா என மக்கள் பதற்றப்படுகின்றனர். கவலை வேண்டாம். டிச.31-க்குள் விரல்ரேகை பதிவு செய்யவேண்டியது கட்டாயம்தான். ஆனால் அதை செய்யாத பட்சத்தில் ரேஷன் அட்டையை ரத்து செய்யலாமா என்பதை பற்றி அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க.


