News November 23, 2024

வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே முன்னிலை

image

மகாராஷ்டிராவின் வொர்லி (Worli) தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை வகிக்கிறார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிண்ட் முரளி தியோரா பின்தங்கியுள்ளார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

Similar News

News December 29, 2025

கில்லால் அனைத்து ஃபார்மெட் கேப்டனாக முடியாது: Ex வீரர்

image

சுப்மன் கில் திறமையான வீரர்தான், ஆனால் பல நேரங்களில் சோம்பேறித்தனமான ஷாட்களை அடிப்பதாக Ex ENG வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தீவிரமும், ஆக்ரோஷமும் அனைத்து ஃபார்மெட் போட்டிகளிலும் வெளிப்பட்டதாகவும், ஆனால் அதை கில்லால் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கில்லால் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

image

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

News December 29, 2025

புத்தகம் இருக்கும் கையில் பட்டாக்கத்தியா? EPS

image

வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட <>தாக்குதல் <<>>தொடர்பான வீடியோவை கண்டு நெஞ்சம் பதைக்கிறது என EPS தெரிவித்துள்ளார். புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி இருப்பது வெட்கக்கேடானது எனவும், தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் வருவதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு எனவும் அவர் கேட்டுள்ளார்.

error: Content is protected !!