News July 27, 2024

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் நாளை நீர் திறப்பு

image

ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஆடிப்பெருக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, ஆடி மாதம் 18ஆம் தேதி புனித தலங்களில் நீராடி மக்கள் கொண்டாடுவர். இதையொட்டி, நாளை முதல் ஆகஸ்ட் 3 வரை, விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆக.3ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது.

Similar News

News April 7, 2026

KKR, PBKS போட்டி மழையால் ரத்து

image

கொல்கத்தாவில் நடந்த KKR, PBKS அணிகள் இடையிலான போட்டி மழையின் காரணமாக ரத்தானது. முதலில் பேட்டிங் செய்த KKR, 3.4 ஓவர்களில் 25/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சுமார் 2 மணி நேரம் கழித்து மழை நின்ற நிலையில், ஆடுகளத்தில் நீர் தேங்கியிருந்ததால் ஈரப்பதமாகவே இருந்ததால் போட்டியை தொடரும் முடிவை அம்பயர்கள் கைவிட்டனர். இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

News April 7, 2026

ராசி பலன்கள் (07.04.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

9 போலீசாருக்கு மரண தண்டனை.. அடுத்து என்ன?

image

▶<<19582868>>9 பேருக்கும்<<>> போலீஸ் சார்பில் வழங்கப்படும் பிழைப்பூதியம் நிறுத்தப்படும். ▶ ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம். ▶தமிழக கவர்னரிடம் கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் ▶ கவர்னர் கருணை மனுவை நிராகரித்தால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பலாம். ▶ ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். ▶சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நிலை வரும்.

error: Content is protected !!