News May 25, 2024
நிலம் மனைப் பிரச்னைகளைப் போக்கும் ஆதிவராகர்

பூமாதேவியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, காத்த வராகரை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சனிக்கிழமையன்று விரதமிருந்து, வராகர் அவதரித்த திருத்தலமாகப் போற்றப்படும் திண்டிவனம் அருகே உள்ள பெரமண்டூர் ஆதிவராகர் கோயிலுக்கு சென்று, நெய் தீபமேற்றி, வராக மூலமந்திரத்தை 108 முறை பாடி, துளசி மாலை சாற்றி வழிபாட்டால் நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
News March 5, 2026
வாழ்க்கை பிரகாசிக்க செய்யும் வெண்பூசணி வழிபாடு

புதுக்கோட்டை, திருமயம் என்னும் ஊரில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிகோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.


