News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

image

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 21, 2025

நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

image

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.

News November 21, 2025

மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்: ராமதாஸ்

image

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திட்டம் தொடர்பான அறிக்கையை 2024-ல் அனுப்பிய தமிழ்நாடு அரசு, அதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!