News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு

image

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது. நேர விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இதனை தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

News December 5, 2025

மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பர்: கனிமொழி

image

மதவாத அரசியலை தமிழகத்தில் செய்துவிட RSS-BJP தொடர்ந்து முயற்சித்து வருவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த முயற்சியை, தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிப்பது தான் வியப்பாகவுள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 5, 2025

25 ஆண்டுகால மோடி, புடின் நட்பு (RARE IMAGE)

image

PM மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அரசியலையும் கடந்து மிக நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நட்பு இன்று நேற்று அல்ல 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய இந்திய PM வாஜ்பாய் புடினை சந்தித்தார். அவருடன் குஜராத் CM-மாக இருந்த மோடியும் சென்றிருந்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்திருப்பதாக அறியப்படுகிறது.

error: Content is protected !!