News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

BREAKING: விலை தாறுமாறாக மாறியது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹6 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி கிலோ ₹104-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால், தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை உயர்கிறது. அதேபோல், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.95-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

News November 16, 2025

₹44,900 சம்பளம், இன்றே கடைசி: APPLY NOW!

image

புலனாய்வு துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 258 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News November 16, 2025

பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கும் திமுக: உதயநிதி

image

நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரே கட்சியாக திமுக திகழ்கிறது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படை கொள்கை, வலுவான கட்டமைப்பு ஆகிய 3 விஷயங்கள் இருந்தால் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டு வளர்ச்சியை அடைய முடியும். மூன்றும் உள்ள திமுக 75 ஆண்டுகள் கடந்தும், வலுவான கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!