News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

News August 9, 2025

30 ஆண்டுகளாக PM மோடிக்கு ராக்கி கட்டும் PAK பெண்!

image

PM மோடிக்கும் PAK பெண் ஒருவருக்கு இருக்கும் சகோதரத்துவ பந்தம் வியப்பில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தானில் பிறந்த கமர் மொஹ்சின் ஷேக், இந்தியர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு அகமதாபாத்தில் செட்டிலாகினார். 90-களில் மோடியை(அப்போது அவர் CM கூட இல்லை) முதன்முதலில் சந்தித்து ராக்கி கட்டிய கமர், அப்பழக்கத்தை 30 ஆண்டுகளாக தொடர்கிறார். ராக்கியை அவர் வாங்குவதில்லை, அவரே ஸ்பெஷலாக தனது கையால் தயாரிக்கிறார்.

News August 9, 2025

திமுகவை வீழ்த்த வேண்டும் என PMK பொதுக்குழுவில் தீர்மானம்

image

<<17350932>>பாமக பொதுக்குழு<<>> கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வு, மோசடி அரசு, போதைப்பொருள் அரசு என கடும் வார்த்தைகளுடன் கூடிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், திமுக அணியில் PMK இல்லை என்பதை அன்புமணி உறுதி செய்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!