News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

பாமக MLA-க்கள் ஒற்றுமையா இருக்கணும்: உதயநிதி

image

சேலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் பாமக MLA-க்களான அருள் (ராமதாஸ் தரப்பு), சதாசிவம் (அன்புமணி தரப்பு) ஆகியோர், தமிழக அரசை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த 2 MLA-க்கள் போட்டி போட்டு அரசை பாராட்டியதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரி பேசியதாக தெரிவித்த அவர், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பாமக பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

News September 16, 2025

முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

image

இந்திய இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI ரேங்கிங்கில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் அவர் முதல் இடம் பிடிப்பது இது 2-வது முறையாகும். 735 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க, இங்கிலாந்தின் Sciver-Brunt 731 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் ஸ்மிருதி மந்தனா முதல் ODI-ல் 58 ரன்களை அடித்திருந்தார்.

News September 16, 2025

‘இறந்த மகளுடன் தினமும் பேசுகிறேன்’

image

தற்கொலை செய்து கொண்ட தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி எமோஷனலாக பேசியுள்ளார். மகளின் இழப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘இது இழப்பு இல்லை. அவள் என்னுடன்தான் இருக்கிறாள், அவளுடன் தினமும் பேசுகிறேன், என்னுடனே அவள் பயணிக்கிறாள். அவளை மிஸ் செய்கிறேன் என்று சொன்னால் சரியாக இருக்காது’ என உருக்கமாக பேசினார். 2023-ல் மீரா தனது 16 வயதில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!