News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

Sports 360°: ரஞ்சியில் தமிழகம் சொதப்பல் பேட்டிங்

image

*ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் இன்னிங்ஸில் TN 182 ரன்களுக்கு ஆல் அவுட். *தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ODI-ல் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி. *2-வது பயிற்சி டெஸ்டில் SA A-வுக்கு 417 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா A. *உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிளில் இளவேனில் வெண்கலம் வென்றார். *50மீ பிஸ்டலில் ரவீந்தர் சிங்கிற்கு தங்கம் கிடைத்தது.

News November 9, 2025

தேர்தல் கூட்டணி.. விஜய் கட்சியில் மாற்றம்

image

விஜய்யின் கூட்டணி முடிவால் தவெக 2-ம் கட்ட நிர்வாகிகள் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் துயருக்கு பிறகு கூட்டணி என அவர்கள் விரும்பியதாகவும், ஆனால் மூத்த நிர்வாகிகள் விஜய்யின் மனதை மாற்றிவிட்டதாகவும் பேசப்படுகிறது. தனித்து நின்றால் DMK-வுக்கு அது சாதகமாகும் என கருதி, தேர்தல் சீட் கேட்க கூட தயங்குகின்றனராம். கூட்டணி பற்றிய அவர்களது மனமாற்றத்தால் தவெக தலைமை குழப்பத்தில் உள்ளதாம்.

News November 9, 2025

அதிமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது: EPS

image

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என EPS பேசியுள்ளார். காற்றை எப்படி தடை போட முடியாதோ, அது போல தான் அதிமுகவை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கூடவே இருந்த பல எட்டப்பர்களின், வீழ்த்தும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து அதிமுக தலைநிமிர்ந்து நிற்பதாக EPS தெரிவித்தார். மேலும், இந்தியாவில் எந்த கட்சியும் அதிமுகவை போல கடும் சோதனைகளை சந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!