News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

8 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

சேலையில் வார்த்த வெண்ணிலவாய் ஸ்ருதி

image

கோலிவுட்டில் தொடங்கிய ஸ்ருதியின் நடிப்பு பயணம், ஆங்கில படங்கள் வரை தொடர்கிறது. ‘7 ஆம் அறிவு’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், ‘3’ பட ஜனனியை மறவாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையின் நளினத்தில் மின்னும் இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.

News October 19, 2025

GST 2.0: கல்லா கட்டிய கார், பைக் நிறுவனங்கள்

image

ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் எதிரொலியாக, பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. நவராத்திரியின் 8 நாள்களில் மாருதி சுசூகி 1.65 கார்களையும், டாடா மோட்டர்ஸ் 50,000 கார்களையும் விற்பனை செய்துள்ளன. அதேபோல் மஹிந்திரா 60%, ஹுண்டாய் 72% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஹீரோ, பஜாஜ் போன்ற டூவீலர் நிறுவனங்கள் 2 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளன.

error: Content is protected !!