News February 17, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

image

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மங்களகரமான தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அந்தவகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

தேமுதிகவால் திமுக கூட்டணியில் அதிருப்தியா?

image

பல தேர்தல்களாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு தொகுதிகளை குறைத்துவிட்டு, தேமுதிகவுக்கு அதிகமாக வழங்கியதால் திமுக மீது அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ’தேமுதிகவை நம்பி இவ்வளவு தொகுதிகளை கொடுக்குறீங்களே, அடுத்த எலெக்‌ஷனுக்கு NDA-வில் இணைந்துவிட்டால் என்ன செய்வது’ என கூட்டணி கட்சிகள் கேட்டதற்கு, தேமுதிக அப்படி செய்யாது என திமுக கேரண்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.

News March 10, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

image

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

News March 10, 2026

கேஸ் புக்கிங் செய்ய இனி 25 நாள்கள் காத்திருக்கணும்

image

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கல் & கள்ளச்சந்தையை தடுக்க, 2 சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாள்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு Commercial கேஸ் சப்ளையில் முன்னுரிமை அளிக்கவும், ஹோட்டல்கள், பிற தொழிற்சாலைகளுக்கான சப்ளையை மதிப்பாய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!