News July 4, 2025
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
Similar News
News July 4, 2025
மறுகூட்டல் மூலம் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை

பொள்ளாச்சியை சேர்ந்த குருதீப் என்ற மாணவன் சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் முடிவுகள் இன்று வெளியானது. அதில் அவர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழில் 99 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து, மொத்தமாக 499 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார். வாழ்த்துகள் குருதீப்!
News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News July 4, 2025
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் குஜராத்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து, குஜராத் அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஒரு வாரத்திற்கான அதிகபட்ச பணிநேரம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும், பெண்கள் இரவு ஷிஃப்டில் பணியாற்றும் வகையிலும் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில், ஆந்திராவில் வேலை நேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த, அம்மாநில அரசு முடிவெடுத்தது. வேலை நேரத்தை உயர்த்தும் முடிவு சரியா?