News April 20, 2024

அரசுப் பேருந்துகளில் கூடுதல் பயணிகள் பயணம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4.03 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களை விடவும் இத்தேர்தலுக்கு 1.48 லட்சம் பேர் கூடுதலாகப் பயணித்துள்ளனர். அதேபோல், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது அரசுப் பேருந்துகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கைய விட இது கூடுதல் ஆகும்.

Similar News

News November 16, 2025

6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

image

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

News November 16, 2025

பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

image

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

News November 16, 2025

சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

image

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!