News February 18, 2025
பள்ளிகளுக்கு ₹2,000 கோடி கொடுக்கும் அதானி

நாடு முழுவதும் பள்ளிகளைக் கட்ட ₹2,000 கோடி வழங்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதற்காக GEMS எனும் சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 20 பள்ளிகள் கட்டப்படும் எனவும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ₹10,000 கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அதானி அறிவித்திருந்தார்.
Similar News
News December 31, 2025
2025-ன் கடைசி சூரிய அஸ்தமனம்!

புத்தாண்டு என்பதை தாண்டி 2025-ம் ஆண்டின் கடைசி நாள் பலரை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அந்த வகையில் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண நாட்டின் கடற்கரைகள், மலை பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் முதலில் அருணாச்சலில் நடந்துள்ளது. அதேபோன்று இந்தியாவிலேயே இங்கு தான் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Bye Bye 2025!
News December 31, 2025
இன்று இரவு சரக்கு அடிப்பவர்களே.. உங்களுக்காக

இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும்தான் குடித்துக்கிறேன்; நாளை முதல் சரக்கை கையில் கூட தொட மாட்டேன் என்று பலரும் சத்தியம் செய்வார்கள். அப்படித்தான் பலர் தற்போது டாஸ்மாக் கடைகளில் நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பார்ட்டி நடத்தினாலும், டி.ஜே மியூசிக் மற்றும் சாலைகளில் வீலிங் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என TN போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 31, 2025
’தமிழ்நாடு’ – நீக்கியது ஜெயலலிதா தான்: சிவசங்கர்

அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதற்கு ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். பஸ்களில் தமிழ்நாடு இல்லாததை கண்டித்து சீமான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரியலூரில் பேசிய சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று கருணாநிதி வைத்த பெயரை, நீளமாக இருக்கிறது என்று கூறி, அதில் தமிழ்நாடு நீக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான் எனத் தெரிவித்துள்ளார்.


