News February 18, 2025
பள்ளிகளுக்கு ₹2,000 கோடி கொடுக்கும் அதானி

நாடு முழுவதும் பள்ளிகளைக் கட்ட ₹2,000 கோடி வழங்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதற்காக GEMS எனும் சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 20 பள்ளிகள் கட்டப்படும் எனவும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ₹10,000 கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அதானி அறிவித்திருந்தார்.
Similar News
News January 8, 2026
ரெடியா? நாளை முதல் காலை 11 – இரவு 8.30 வரை

49-வது சென்னை புத்தக கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (ஜன. 21 வரை) நடைபெறும் என்றும் இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதை, நாவல் உள்பட லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியில், நீங்க வாங்க விரும்பும் புத்தகம் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
News January 8, 2026
புயல்.. நாளை 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் நாளை(ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நாளை திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். BE CAREFUL
News January 8, 2026
சென்சார் விவகாரம்.. விஜய் மௌனியாக இருப்பது ஏன்?

சென்சார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜனநாயகனே (விஜய்) வாய்மூடி மௌனியாக இருப்பதாக CPM பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சென்சார் போர்டை குறை சொன்னால் மத்திய அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை; தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என எதுவும் சொல்லாமல் இருக்கிறார்; அப்படி இருக்கையில் மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன ஆகப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.


