News February 18, 2025
பள்ளிகளுக்கு ₹2,000 கோடி கொடுக்கும் அதானி

நாடு முழுவதும் பள்ளிகளைக் கட்ட ₹2,000 கோடி வழங்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதற்காக GEMS எனும் சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 20 பள்ளிகள் கட்டப்படும் எனவும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ₹10,000 கோடியில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாக அதானி அறிவித்திருந்தார்.
Similar News
News August 14, 2025
ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.
News August 14, 2025
அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.
News August 14, 2025
சபாநாயகர் அப்பாவு காரை சுற்றிவளைத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முருகேசபுரத்தில் ₹423 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்க சபாநாயகர் அப்பாவு சென்றுள்ளார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த பெண்கள் 40% கூட முடிவடையாத இத்திட்டத்துக்கு விளம்பர தேடி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் திசையின்விளை பகுதியை அப்பாவு பாரப்பட்சமாக புறக்கணிப்பதாகவும், போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.