News December 8, 2024

அடம் பிடிக்கும் ஷிண்டே.. MH அரசியலில் புது குழப்பம்!

image

MHஇல் CM பதவியேற்பு விழா முடிந்து 4 நாள்கள் ஆகியும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கண்டிஷன்களை போட்டுத் தான் ஃபட்னவிஸுக்கு CM பதவியை ஷிண்டே விட்டுக்கொடுத்ததாகத் தெரிகிறது. அதில், Dy CM, உள்துறை தனக்கு வேண்டும் என்பதும் அடங்கும். ஆனால், உள்துறையை தன் வசம் வைத்திருக்க CM விரும்புவதால் ஷிண்டே தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 25, 2025

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. HAPPY NEWS

image

மிலாடி நபி செப்டம்பர் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனையொட்டி, TNSTC சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்பின், செப்டம்பரில் வார விடுமுறையை தவிர்த்து பிற விடுமுறை இல்லாததால் சொந்த ஊர் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். SHARE IT.

News August 25, 2025

Already அரசியலில் இருக்கேன்: அதிரடி காட்டும் நடிகர் விஷால்

image

தான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஊட்டியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய விஷால், அரசியல் கட்சிகளின் கொடிகளில் பல நிறங்கள் உள்ளன; ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் இல்லை என விமர்சனம் செய்தார். மேலும், விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் தலைகீழாக மாற்றம் கண்டிருக்கும் என்றும் கூறினார்.

News August 25, 2025

பேனாவுல எழுதுனா இவ்வளவு நன்மை இருக்கு..!

image

கடைசியா எப்போ பேனாவுல எழுதுனீங்க? இந்த கேள்வி இப்போ எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம். இப்படி கேட்க காரணம் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் மயமா ஆகிட்டதுனால பேனாவுல எழுதுறத நம்ம மறந்துட்டோம் என்றும் இதனால் கற்றல் அறிவு குறஞ்சிட்டதா நிபுணர்கள் சொல்றாங்க. பேனாவுல எழுதுறது நம்ம அறிவாற்றல கூட்டுறதோட மட்டுமில்லாம பார்கின்சன் நோயைக் கண்டறியவும் உதவுதாம். அதனால, திரும்பவும் பேனாவுல எழுத தொடங்குங்க.

error: Content is protected !!