News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 3, 2026
ஏப்ரல் 3: வரலாற்றில் இன்று

*1680-சத்ரபதி சிவாஜி நினைவு நாள் *1903–சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாள் *1904–பத்திரிகையாளர் ராம்நாத் கோயங்கா பிறந்தநாள் *1907–தமிழறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் பிறந்தநாள் *1951–அரசியல்வாதி பூ.செந்தூர் பாண்டியன் பிறந்தநாள் *1954–அரசியல்வாதி கிருஷ்ணசாமி பிறந்தநாள் *1955–ஹரிஹரன் பிறந்தநாள் *1973–பிரபுதேவா பிறந்தநாள் *1992–அரசியல்வாதி எஸ்.எஸ்.ராமசாமி நினைவு நாள்
News April 3, 2026
அதிமுகவில் இணைந்த திமுக, மதிமுக நிர்வாகிகள்

கரூரில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 24-வது வார்டு திமுக உறுப்பினரும் கரூர் மாநகர மேற்கு பகுதி Ex செயலாளருமான அன்பரசன் மற்றும் கரூர் மாவட்ட மதிமுக Ex பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். போதை கலாசாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிட EPS-ன் தலைமையை ஏற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
News April 3, 2026
PM மோடியுடன் ரஷ்ய DPM முக்கிய ஆலோசனை

2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய DPM டெனிஸ் மந்த்ரொவ் PM மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதில் இருதரப்புக்கு இடையேயான உறவு, வர்த்தகம், உரங்கள் விநியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். அதோடு, 2025-ல் நடந்த இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு, இருதரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


