News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 7, 2025
புதிய வரலாறு படைத்த டெய்லர்

ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர், 21-ம் நூற்றாண்டில் நீண்டகாலம் (21Y 93D) சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீர்ர் என்ற சாதனை படைத்திருக்கிறார் . ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை (21Y 51D) டெய்லர் முறியடித்துள்ளார். மே 6, 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார் டெய்லர். இன்று டெய்லருடன் ஓபனிங்கில் களமிறங்கிய பென்னட், 2004-ல் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது 5 மாதக் குழந்தையாக இருந்தார்.
News August 7, 2025
‘அம்மா… நான் போகிறேன்’

கந்துவட்டி கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் வசித்துவந்த ரவிக்குமார், வட்டிக்கு ₹50,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு ₹15,000-ஐ பிடித்துக்கொண்டு ₹35,000 கொடுத்துள்ளனர். இதற்கு ₹1.20 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டிய நிலையில், கடன் தீராத விரக்தியில், ‘நான் போகிறேன் அம்மா’ என தாய்க்கும் மனைவிக்கும் கடிதம் எழுதிவைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன சொல்ல?
News August 7, 2025
திமுகவுக்கு தூதுவிடும் OPS தளபதிகள்?

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவில் சேரும் முடிவில் இருக்கிறார்களாம். டெல்டாவில் வைத்தியலிங்கம் ஆதரவாளர்களை இழுக்கும் அசைன்மென்டை EPS கொடுத்துள்ளாராம். அதிமுகவுக்கு திரும்பினாலும் பழைய ’கெத்து’ இருக்காது என்பதால் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளாராம் வைத்தி. சிட்டிங் தொகுதி ஆலங்குளத்தை கொடுத்தால் திமுகவில் சேர தயார் என மனோஜ் பாண்டியனும் டீல் பேசுவதாக கூறப்படுகிறது. தளபதிகளை தக்கவைப்பாரா OPS?