News September 14, 2024

யூ டியூபர் மீது போலீசில் நடிகை ரோஹிணி புகார்

image

யூ டியூபர் காந்தராஜ் மீது சென்னை போலீசில் நடிகை ரோஹிணி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரோஹிணி அளித்துள்ள புகாரில், அனைத்து நடிகைகளையும் விபச்சாரி போல சித்தரித்தும், பணம் மற்றும் பட வாய்ப்புக்காக நடிகைகள் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள் எனவும் காந்தராஜ் பேசியிருப்பதாகவும், ஆதலால் அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News September 18, 2025

சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

image

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹141-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,41,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹2000, இன்று ₹1000 என 2 நாளில் வெள்ளி விலை ₹3000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்பதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 18, 2025

கூட்டணியா? சற்றுநேரத்தில் மனம் திறக்கிறார் இபிஎஸ்

image

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து EPS இன்று விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, TTV உள்ளிட்டோரை NDA கூட்டணியில் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கலாம். அவரின் செய்தியாளர் சந்திப்புக்கு பின்புதான், கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News September 18, 2025

மீண்டும் தள்ளிப்போகிறதா தனி ஒருவன்-2?

image

தனி ஒருவன்-2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனி ஒருவன்-1 ஐ தயாரித்த AGS நிறுவனத்திடமே 2-ம் பாகத்திற்கான கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஆனால் அர்ச்சனா கல்பாத்தியோ, இது சரியான நேரமில்லை என கூறியிருக்கிறார். தனி ஒருவன்-1 வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2ம் பாகம் வருவது டவுட்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!