News April 7, 2025
நடிகை ரன்யா ராவ் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் நீதிமன்றக் காவல் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து தங்கம் கடத்தியபோது ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதேபோல், தருண் ராஜூ, சாஹில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் கோர்ட் மீண்டும் அதை நீட்டித்துள்ளது.
Similar News
News December 8, 2025
செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.
News December 8, 2025
அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்திருக்கிறீர்களா?

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.
News December 8, 2025
இரவில் சந்தித்தார் ஓபிஎஸ்.. மீண்டும் கூட்டணியா?

கோவையில் நேற்று இரவு அண்ணாமலை – OPS சந்தித்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்புக்குழு நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால், NDA கூட்டணியில் மீண்டும் OPS இணைய வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.


