News February 25, 2025
நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவிலிருந்து விலகல்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் தான், சில மாதங்களுக்கு முன்பு பஸ்ஸில் ஃபுட் போர்ட் அடித்த மாணவர்களை பொதுவெளியில் ‘பளார்’ என அறைந்தவர். சினிமா துணை நடிகையாகவும் இருக்கும் இவர், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
கிராமி விருது பாடகி காலமானார்

கிராமி விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ராபர்டா பிளாக் (88) காலமானார். Killing Me Softly, The First Time I Ever Saw Your Face உள்ளிட்ட பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ராபர்டா பிளாக். அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவர் உயிர் அமைதியாக பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
News February 25, 2025
Political Miracle: ரஷ்யாவிற்கு ஆதரவாக நின்ற USA!

உக்ரைன் போரை நிறுத்தவும், ரஷ்யாவை கண்டிக்கவும் ஐரோப்பிய நாடுகள் ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதில், ரஷ்யாவிற்கு ஆதரவாக USA வாக்களித்துள்ளது. முந்தைய காலகட்டங்களில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்ற USA, தற்போது ரஷ்யா பக்கம் சாய்ந்துள்ளது. இந்த தீர்மானத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்க மறுத்துவிட்டன. USAன் செயல்பாடு உலக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என கருதப்படுகிறது.
News February 25, 2025
₹18 கோடி கடன் தள்ளுபடி? ப்ரீத்தி ஆவேசம்

பாஜக ஆதரவாளராக மாறியதால், ப்ரீத்தி ஜிந்தாவின் ₹18 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, கேரள காங். கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே கடனை அடைத்து கணக்கை மூடிவிட்டதாகவும், ஒரு அரசியல் கட்சி பொய் செய்திகளை பரப்புவது வெட்கக்கேடானது எனவும் அவர் தனது X பக்கத்தில் சாடியுள்ளார். மேலும், தனக்காக யாரும் கடனை தள்ளுபடி செய்யவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.