News June 27, 2024

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

image

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா, போலீஸ் காவலில் மேக்கப் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக அவரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு பவித்ரா அண்மையில் போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்து வீட்டை விட்டு வெளியேவந்தபோது, லிப்ஸ்டிக் போட்ட முகத்தோடு சிரித்துக்கொண்டே வந்தது பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News March 2, 2026

BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

image

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

News March 2, 2026

சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News March 2, 2026

விஜய் – சங்கீதா விவாகரத்து.. நடிகர் ஆரியின் ரியாக்‌ஷன்

image

விஜய் – சங்கீதா விவகாரம் ஹாட் டாபிக்காக உள்ள நிலையில், தற்போது சினிமா நட்சத்திரங்கள் சிலர் அது குறித்து கருத்து கூற தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆரியிடம் கேட்டபோது, விஜய் மட்டுமின்றி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தார். SM வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!