News August 8, 2024
200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 7, 2026
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி நியூசிலாந்து தொடரில் மிகப்பெரிய சாதனை படைக்கவுள்ளார். அதாவது அவர் இன்னும் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். கோலி 3 வடிவங்களிலும் சேர்த்து 623 இன்னிங்ஸ்களில் 27,975 ரன்கள் எடுத்துள்ளார். 28,000 ரன் மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 644 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.
News January 7, 2026
தவெகவில் அடுத்தடுத்து இணைந்தனர்

KAS வரவுக்கு பிறகு தவெக புதுபலம் பெற்றிருக்கிறது. அவர் நகர்த்தும் காய்களால்தான் திமுக, அதிமுக, பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவுக்கு வருகின்றனர். சேலம் Ex MLA பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், புதுச்சேரி Ex பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, வைத்திலிங்கம் (OPS), பெரியசாமி (அதிமுக) போன்ற பலரும் இணைவார்கள் என பேசப்படுகிறது.
News January 7, 2026
பொங்கல் பரிசு.. அரசு அதிகரித்தது

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 தொகையை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை நாளை (ஜன.8) CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லாமல், தமிழகம் முழுவதும் ஜன.8 – 12 வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.13 வரை ஒரு நாள் நீட்டித்து பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


