News August 8, 2024
200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.
News January 9, 2026
பொங்கல்.. ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹4,000 வரை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னை – நெல்லை செல்ல ₹1,800 வரை டிக்கெட் விலை இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகை நாள்களில் ₹4,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் டபுள் மடங்காக உயர்ந்துள்ளது. நீங்க டிக்கெட் போட்டாச்சா?
News January 9, 2026
78 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில் இதுவரை 78,30,523 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரொக்கப்பணம் ₹3,000 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், நேற்றும், இன்றும் பொங்கல் பணத்தை வாங்க முடியாதவர்கள், ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


