News August 8, 2024

200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

image

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

தஞ்சை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

image

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால், கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜன.9-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இந்த பேச்சின் மூலம் கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News December 13, 2025

பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான்: சீமான்

image

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு பாஜக, திமுகவே காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், பாஜகவுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுப்பதே திமுக தான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதிக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பாரதிக்கு விழா எடுக்க வேண்டியது தானே என்றும் கேட்டுள்ளார். மேலும், பாஜக வளர்ந்ததற்கு காரணமே கருணாநிதி தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!