News August 8, 2024

200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

image

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Similar News

News November 23, 2025

ஏலியனுடன் பேசினாரா USA முன்னாள் அதிபர் புஷ்?

image

ஏலியன்கள் பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘The Age of Disclosure’ ஆவணப்படம் மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. அதில், முன்னாள் USA அதிபர் ஜார்ஜ் HW புஷ்-க்கு ஏலியன்கள் பற்றி தெரியும் என்று விண்வெளி இயற்பியலாளர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். 3 UFO விண்கலங்கள் பூமிக்கு வந்ததாகவும், ஏலியன்கள் CIA-வை தொடர்பு கொண்டதாகவும் புஷ் கூறியதாக டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

News November 23, 2025

ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

image

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.

News November 23, 2025

தற்குறி அல்ல, TN அரசியலை மாற்றப்போகும் அறிகுறி: விஜய்

image

தவெக தொண்டர்களை, GenZ கிட்ஸ்களை தற்குறிகள் என திமுகவினர் அழைப்பதாக விஜய் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தற்குறிகளா என கேள்வி எழுப்பிய அவர், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இதுதானா எனவும் கேட்டுள்ளார். மேலும், மக்கள் தற்குறி அல்ல தமிழகத்தின் ஆச்சரியக்குரி எனவும் அரசியலை மாற்றப்போகும் அறிகுறி எனவும் அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.

error: Content is protected !!