News March 15, 2025

DRI அதிகாரிகள் அடித்தனர்.. நடிகை குற்றச்சாட்டு

image

வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI ) அதிகாரிகள் 15 முறை அடித்ததாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதனை மறுத்து ஏடிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி 50-60 பக்கத்தில் கையெழுத்து வாங்கினர், அதில் 40 பக்கம் வெற்று காகிதம், அடித்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2025

ஆண்களே, ரிலாக்ஸ் பிளீஸ்…

image

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடமே உள்ளது. இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணு தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆண்களே டென்ஷன் ஆகாதீங்க. ரிலாக்ஸ் பிளீஸ்!

News March 15, 2025

கட்சியை விட்டு விலகும் செங்கோட்டையன்?

image

EPS – செங்கோட்டையன் இடையேயான பிளவு இன்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்ட நிலையில், செங்கோட்டையனின் பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. <<15773361>>தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர் எதைக் கூறியிருக்கிறார்<<>> என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியை விட்டு விலகி வேறு பாதையில் பயணிக்க இருக்கிறாரா, அல்லது கட்சிக்குள்ளேயே கலகம் செய்ய காத்திருக்கிறாரா? காலம் பதில் சொல்லும்.

News March 15, 2025

வெற்றிப் பாதையில் பயணம் – செங்கோட்டையன் சூசகம்!

image

இபிஎஸ் உடனான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செங்கோட்டையன் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இக்கட்டான நிலையில் இருப்பதால் வெளிப்படையாக எதையும் பேச முடியாது என கூறியுள்ளார். தான் போகும் பாதை சரியானது எனத் தெரிவித்துள்ள செங்கோட்டையன், திட்டமிட்ட பாதையில், வெற்றி பெறும் பாதையில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!