News March 18, 2025

நடிகை அகுஷ்லா செல்லையா காலமானார்

image

இலங்கையின் முதல் சூப்பர் மாடலும், நடிகையுமான அகுஷ்லா செல்லையா (67) காலமானார். ‘ஸ்லேவ் ஆஃப் தி கன்னிபல் காட்’, ‘டார்சன் தி ஏப் மேன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து சர்வதேச அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Similar News

News March 18, 2025

உயர்ந்த மனிதர் காலமானார்!

image

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.

News March 18, 2025

இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (1/2)

image

1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.

News March 18, 2025

இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

image

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.

error: Content is protected !!