News March 31, 2025
நடிகர் விஜய் இரங்கல்

உடல் நலக்குறைவால் உயிரிழந்த தவெக செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சூரிய நாராயணின் குடும்பத்தினரிடம் விஜய் போனில் இரங்கல் தெரிவித்துள்ளார். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் செங்கல்பட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News April 2, 2025
கச்சத்தீவை பெற இன்று தனித் தீர்மானம்

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
News April 2, 2025
இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.. Apply Now

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.