News May 17, 2024
நடிகர் கார்த்திக் குமார் ஆணையரிடம் புகார்

பட்டியலின சமுதாயத்தை தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது தொடர்பாக, நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தனது முன்னாள் மனைவி சுசித்ராவை கேள்வி கேட்கும் போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. ஆனால், அது தனது குரல் அல்ல என அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மனு அளித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
தேனியில் கஞ்சா பதுக்கிய பெண்கள் கைது!

கம்பம் தெற்கு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த பேச்சியம்மாள், ராஜகுமாரி ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 19, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி!

NDA கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை EPS – அன்புமணி இருவரும் இணைந்து வெளியிட உள்ளனராம். கூட்டணி உறுதியானதன் எதிரொலியாகவே மயிலம் பாமக MLA-வாக உள்ள சிவக்குமார், வரும் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் CV சண்முகம் களமிறங்க உள்ளார்.
News December 19, 2025
கோலியின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக்?

IND, SA இடையே இன்று 5-வது டி-20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா, கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டிற்குள் T20-ல் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. அவர் 2016-ல் 1,614 ரன்கள் (IND, RCB) அடித்துள்ளார். நடப்பாண்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ள அபிஷேக் (IND, PUN, SRH) கூடுதலாக 47 ரன்கள் எடுத்தால் அச்சாதனை தகர்க்கப்படும்.


