News May 17, 2024
நடிகர் கார்த்திக் குமார் ஆணையரிடம் புகார்

பட்டியலின சமுதாயத்தை தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது தொடர்பாக, நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தனது முன்னாள் மனைவி சுசித்ராவை கேள்வி கேட்கும் போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. ஆனால், அது தனது குரல் அல்ல என அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மனு அளித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
ம.பி., கேரளாவில் 66.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ம.பி.,யில் SIR பணிகளுக்கு பின் வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 42.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 31.25 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்துக்கு மாறியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. இதேபோல் கேரளாவில் 24.08 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு பிறகு இதுவரை TN-ல் அதிகபட்சமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
சனி பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு எச்சரிக்கை

2026-ல் சனி பகவானின் தாக்கத்தால், மேஷம், கும்பம், மீனம், சிம்மம், தனுசு ஆகிய ராசியினர், குடும்பத்தில் பதற்றம், மன அழுத்தம் என பல சவால்களை சந்திக்க கூடுமாம். இதற்கு பரிகாரமாக, சனிக்கிழமைகளில் கருப்பு எள், கருப்பு குடை, கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றை தானம் செய்வது நல்லது. மேலும், சனி பகவானின் சன்னதியில் தீபம் ஏற்றுதல், ஆஞ்சநேயரை வழிபடுதல் ஆகியவை சிறந்த பரிகாரமாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
News December 23, 2025
விஜய் செய்வது மன்னிக்க முடியாத குற்றம் : கஸ்தூரி

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து ஆந்திரா DCM பவன் கல்யாண் அறிக்கை விடுகிறார். ஆனால் இங்கே பனையூரில் இருக்கும் விஜய், அதைபற்றி பேசாதது மிகப்பெரிய தவறு என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு, இளைஞர் மரணம் என திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் ஒரு அறிக்கை கூட விஜய் வெளியிடாதது மன்னிக்க முடியாத குற்றம் என கஸ்தூரி கடுமையாக சாடியுள்ளார்.


