News April 29, 2025
மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்ட நடிகர்

கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் சாக்கோ, போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஹைப்ரிட் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். இவரோடு, ஸ்ரீநாத் பாசி உட்பட மூன்று திரையுலகினரும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சாக்கோ போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News April 30, 2025
முன்னாள் பாக். MP இந்தியாவில் இருக்க அனுமதி

ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் முன்னாள் பாக். MP தபயா ராம், இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 6 பேருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் மத அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக, அவர் கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார்.
News April 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 322 ▶குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ▶பொருள்: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.
News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.