News August 4, 2024

தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை: சுரேஷ் கோபி

image

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே முதல் பணி எனக் கூறிய அவர், மாயமானோர் குறித்த விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். மீட்புப்பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டால், மத்திய அரசு வழங்கும் எனவும் கூறினார்.

Similar News

News April 3, 2026

PM மோடியுடன் ரஷ்ய DPM முக்கிய ஆலோசனை

image

2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய DPM டெனிஸ் மந்த்ரொவ் PM மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதில் இருதரப்புக்கு இடையேயான உறவு, வர்த்தகம், உரங்கள் விநியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். அதோடு, 2025-ல் நடந்த இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு, இருதரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 3, 2026

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு மசோதாவுக்கு தவெக எதிர்ப்பு

image

வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி & மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பது ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

News April 3, 2026

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தாலே புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும் *வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது நம் பின்னால் வரும் *திடமான மனதுடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம் *முடியும் வரை முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை *சாவி இல்லாத பூட்டு இருக்காது, தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது

error: Content is protected !!