News April 30, 2024
அதிரடி சோதனை நடத்தப்பட வேண்டும்

போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று SDPI வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், கஞ்சா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதற்காக மாவட்ட அளவில் தனிப்படைகள் அமைத்து எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிரடி சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
பிஹார் தேர்தல்: முழு ரிசல்ட் இதோ..

பிஹாரின் 243 தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக 89, JD(U) 85 என NDA கூட்டணி மொத்தம் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. RJD 25, காங்கிரஸ் 6 என MGB கூட்டணி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட 15 தொகுதிகளில் கூடுதலாக வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல், கடந்த தேர்தலை விட RJD 50, காங்கிரஸ் 13 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது.
News November 15, 2025
அலுவலக ரொமான்ஸ்.. அசர வைக்கும் இந்தியா

YouGov உடன் இணைந்து Ashley Madison, உலகளவில் அலுவலக ரொமான்ஸ் அதிகமுள்ள நாடுகளை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாம் நினைப்பதை விட அதிகமாகவே அலுவலக ரொமான்ஸ் இருக்கிறது. எந்த நாட்டில், எவ்வளவு சதவீதம், அலுவலக ரொமான்ஸ் நடைபெறுகிறது என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 15, 2025
விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.


