News July 7, 2024
போலே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாயாவதி

போலே பாபா போன்ற மற்ற பாபாக்கள் & சாமியார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். அவர் தனது X பதிவில், நாட்டில் உள்ள ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையை சாமியார்கள் பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். 121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான போலே பாபா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 23, 2025
வெளிநாட்டில் ஆயுத உற்பத்தி தொடங்கிய இந்திய நிறுவனம்

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில், ராணுவ வாகன உற்பத்தி தொழிற்சாலையை டாடா நிறுவனம் நிறுவியுள்ளது. அந்நாட்டிற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த தொழிற்சாலையை தொடங்கி வைக்க உள்ளார். ஒரு இந்திய நிறுவனம் வெளிநாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை நிறுவுவது இதுவே முதல்முறையாகும். ஆண்டுக்கு 100 போர் வாகனங்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
News September 23, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். தினம் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடுவது இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க உதவும் என்கின்றனர் டாக்டர்கள். இப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் நிறைந்திருப்பதால், BP-யை கட்டுப்படுத்த உதவும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 23, 2025
என்கிட்டயேவா.. தக் பதில் கொடுத்த மோகன்லால்

மோகன்லாலின் கவுண்ட்டர் பதில்களுக்காகவே அவரது நேர்காணலை பலரும் பார்ப்பதுண்டு. அப்படித்தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ‘தாதா சாகேப் பால்கே’ விருது குறித்தும் கலகல பதிலை அளித்துள்ளார். ஒரு நடிகருக்கான உயரிய விருதே கிடச்சாச்சு, இதுக்கு மேல சாதிக்க ஒன்னுமில்ல, இனி எதுக்கு நடிப்பை தொடருறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு, ஐயோ அப்டியா, எனக்கு நடிப்ப தவிர எதுவும் தெரியாது, இனி நான் என்ன செய்வேன் என பதிலளித்தார்.