News April 24, 2025
முப்படைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பதிலடி தாக்குதல் தொடர்பாக இன்று(ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 2, 2025
அய்யோ சாமி! BREAKING NEWS ஆக்காதீங்க! செல்லூர் ராஜு

செங்கோட்டையன் நீக்கம் குறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்தார். அப்போது, எனக்கும்தான் மன வருத்தம் இருக்கும், அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது; அதை EPS-யிடம் தான் கூற வேண்டும் என்றார். உடனே, உங்களுக்கு என்ன மனவருத்தம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். சுதாரித்துக் கொண்ட அவர், எனக்கு மனவருத்தம் இல்லை; EPS என்னை நன்றாக வைத்துள்ளார். இதை ஒரு BREAKING NEWS-ஆக போட்டு விடாதீங்க என கேட்டுக்கொண்டார்.
News November 2, 2025
3-வது T20: இந்தியா பவுலிங்.. அணியில் 3 மாற்றங்கள்!

ஓவல் மைதானத்தில் நடக்கும் 3-வது T20-யில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு, ராணா, குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.
News November 2, 2025
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு!

தேர்தல் ஆணையம் SIR-ஐ திரும்ப பெறவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், SIR-ஐ ஏற்க முடியாது எனவும், இது வாக்குரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.


