News September 29, 2025
கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.
Similar News
News December 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.
News December 13, 2025
கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <


