News September 29, 2025

கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

image

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.

Similar News

News September 29, 2025

வங்கி அக்கவுண்ட் இருக்கா.. இத உடனே பண்ணுங்க!

image

PM ஜன்தன் வங்கி கணக்குகள் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், நாளைக்குள் Re-Kyc அதாவது தகவலை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடையூறின்றி வங்கியின் சேவைகள், அரசின் மானியங்களை பெறவும் இந்த KYC மறுபுதுப்பித்தலை செய்யும்படி RBI கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது 55.90 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. SHARE IT.

News September 29, 2025

BREAKING: தவெக தலைவர்களை கைது செய்ய புறப்பட்டனர்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர்கள் N.ஆனந்த், CTR நிர்மல்குமார், மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், N.ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை, புதுச்சேரிக்கு போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 29, 2025

Sports Roundup: ஹாக்கியில் இந்தியா அசத்தல் வெற்றி

image

*ஏடிபி 500 டோக்கியோ ஓபனில் ரோகன் போபண்ணா – டகேரு யுசூகி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *ஜூனியர் ஹாக்கியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. *ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், 4*100மீ மெட்லே ரிலே பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. *புரோ கபடி லீக்கில் இன்று யுபி யோத்தாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்.

error: Content is protected !!