News July 25, 2024

தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

image

கட்டட அனுமதி பெறுவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் தவறான தகவல்களை அளித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என்றும், அதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்கள் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிமீறல்களை சரி செய்யாவிடில் அவை அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 5, 2025

SK-க்கு வில்லனாக நடிக்க அழைப்பு: லோகேஷ்

image

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க தன்னை அணுகியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு அக்கதை பிடித்திருந்ததாகவும், SK-வும், தான் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எனினும் கூலி படத்தில் பிஸியாக இருந்ததால் அதனை நிராகரித்ததாக தெரிவித்த லோகேஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

News August 5, 2025

GOOD BYE அம்மா.. உருக்கமான தற்கொலை கடிதம்

image

‘அன்புள்ள குடும்பத்தினரே, இதை படிக்கும்போது அழ வேண்டாம். நான் ஏற்கனவே சொர்க்கம் சென்றிருப்பேன். உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுகிறேன். GOOD BYE அம்மா.’ படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் இந்த வரிகள் 14 வயதேயான சிறுவனின் தற்கொலை கடிதத்தில் இருந்தவை. பெங்களூருவில் 7-வது படிக்கும் சிறுவன், தனது அம்மா வெளியூர் சென்ற நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 5, 2025

ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமா

image

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை தடுக்க உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்தாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தவில்லை என்றார். மாநில அரசுகளுக்கு இச்சட்டத்தை இயற்ற அதிகாரமுள்ளதால் TN அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இதனை இயற்ற கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!