News July 25, 2024
தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

கட்டட அனுமதி பெறுவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் தவறான தகவல்களை அளித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என்றும், அதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்கள் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிமீறல்களை சரி செய்யாவிடில் அவை அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
விஜய்யின் மேடை பேச்சு வெறும் பெர்ஃபாமன்ஸ்: ரவிக்குமார் MP

விஜய்க்கு அரசியல் களத்திற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ரவிக்குமார் MP விமர்சித்துள்ளார். மேலும், மேடையில் அவர் பேசுவதெல்லாம் வெறும் பெர்ஃபாமன்ஸ் என்றும், ஆனால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவரை பின் தொடர்வது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக படுதோல்வியை சந்தித்த பின், விஜய்யின் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


