News November 24, 2024
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை..!

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர, உப்பு, டீ தூள், சாம்பார் பொடி போன்ற மளிகைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இதனை பெரும்பாலானோர் வாங்காத போதிலும், அவற்றை கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கார்டுதாரர்களின் விருப்பமில்லாமல் மளிகைப் பொருட்களை விற்கவே கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
திட்டங்களின் பெயர்கள் எதுவுமே புரியவில்லை: ஜோதிமணி

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தி பெயர்களை வைப்பதை எதிர்த்து காங்கிரஸ் MP ஜோதிமணி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களின் பெயர் எங்களுக்கு புரியவில்லை என்றும், நாங்கள் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே அனைவரும் புரியும் என தெரிவித்த அவர், இதையும் ஹிந்தி திணிப்பாகவே பார்ப்பதாகவும் சாடியுள்ளார்.
News December 16, 2025
IPL: எந்த அணியிடம் எவ்வளவு உள்ளது?

2026 IPL தொடருக்கான மினி ஏலம் இன்று (டிச.16) அபு தாபியில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி, எந்த வீரரை, எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்நிலையில், எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


