News November 24, 2024
ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை..!

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர, உப்பு, டீ தூள், சாம்பார் பொடி போன்ற மளிகைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இதனை பெரும்பாலானோர் வாங்காத போதிலும், அவற்றை கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கார்டுதாரர்களின் விருப்பமில்லாமல் மளிகைப் பொருட்களை விற்கவே கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.
News December 3, 2025
சிகரெட் விலை உயர்கிறது

புகையிலை & புகையிலை சார்ந்த பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கும்பொருட்டு, மத்திய கலால் வரி திருத்த மசோதா 2025, லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சிகரெட்களின் விலை, அதன் நீளம், வகையை பொறுத்து 1,000 சிகரெட்களுக்கு ₹2,700 – ₹11,000 வரை உயர்கிறது. இதனால் சிகரெட்டுகளின் விலை ₹2 வரை உயரலாம் என கூறப்படுகிறது. மெல்லும் புகையிலை பொருள்களான பான் மசாலா உள்ளிட்டவை கிலோவுக்கு ₹100 உயர்கிறது.
News December 3, 2025
உள்ளாட்சி தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

டிச.9, 11-ல் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இடுக்கி, பாலக்காடு, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்களை EPS நியமித்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற அப்பகுதியில் வலுவானவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


