News November 24, 2024

ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை..!

image

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர, உப்பு, டீ தூள், சாம்பார் பொடி போன்ற மளிகைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இதனை பெரும்பாலானோர் வாங்காத போதிலும், அவற்றை கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கார்டுதாரர்களின் விருப்பமில்லாமல் மளிகைப் பொருட்களை விற்கவே கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

புதுக்கோட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லத்திற்கே சென்று, அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் (02.12.2025) மற்றும் (03.12.2025) ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

image

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 1, 2025

BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

error: Content is protected !!