News August 16, 2024
132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
நெல்லை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 9, 2026
நெல்லை: கீழே விழுந்து பெயிண்டிங் தொழிலாளி பலி.!

ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் இளம்வழுதி (வயது 58). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நாவல் குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியில் கால் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுக்குறித்து மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை.
News January 9, 2026
நெல்லை: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <


