News August 16, 2024

132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News December 19, 2025

நெல்லை: ஜனவரி 2 வரை தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின்படி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று 19ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்படி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

நெல்லைக்கு முதலமைச்சர் வருகை.. முழு விவரம் இதோ…

image

நாளை (டிச.20) நெல்லை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இரவு 7 மணிக்கு திறந்து வைக்கிறார். டிச.21ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நெல்லை G.H மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

News December 19, 2025

நெல்லை – ஐதராபாத் நேரடி ரயில் இயக்கப்படுமா?

image

நெல்லை, குமரியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு விரைவில் இயக்கப்படுகின்றன. ஆனால், ஐதராபாத்துக்கு நெல்லை, குமரியில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, நெல்லையிலிருந்து ஹைதராபாத்திற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

error: Content is protected !!