News August 16, 2024
132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 23, 2025
நெல்லை: ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளை முன்னிட்டு 25ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை ஐந்து மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். 26ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருள செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு நடன தீபாரதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 23, 2025
நெல்லை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

நெல்லை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..
News December 23, 2025
நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் பலி!

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் மூக்கன் (52) – தங்ககணபதி (50) இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூக்கன் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதற்குப் பழிவாங்கிய தங்ககணபதியின் சகோதரர் முத்துக்குமரன் (46) மூக்கனை அரிவாளால் வெட்டினார். இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தங்ககணபதி குணமடைந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூக்கன் உயிரிழந்தார். இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.


