News March 22, 2024
அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார்

அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதை தனது கொள்கையாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்துள்ளதாக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் தான் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய மறுக்கிறார். பதவிப்பிரமாணம் செய்வதை தவிர்க்கிறார். ஆளுநர் உரையை வாசிக்க மறுக்கிறார். மசோதாக்களை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்!

*அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும். *நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை. *எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான். *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
News November 4, 2025
BREAKING: கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தி 3 பேரும் தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸ் கூறுகிறது. 3 பேரும் கோவை அரசு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News November 4, 2025
நடிகர்கள் அரசியலில் நடிக்க கூடாது: சரத்குமார்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அதிலும் நடிக்க கூடாது எனவும் அவர் பேசியுள்ளார். அவர்களின் தகுதி, பேசும் விஷயங்கள், அவற்றை செயல்படுத்தும் திறன் உள்ளதா? எதற்காக அரசியலுக்கு வருகின்றனர் என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.


