News April 24, 2024

வேலூரில் மறுவாக்குப்பதிவு நடத்த ஏசிஎஸ் கோரிக்கை

image

8 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார். வேலூர் தொகுதிக்குட்பட்ட 8 மையங்களில் வாக்களிக்க வந்த பொதுமக்களை திமுகவினர் தடுத்ததாகவும், அதனால் பொதுமக்கள் வாக்களிக்காமல் வீடு திரும்பியதாகவும் அந்த மனுவில் ஏசிஎஸ் குறிப்பிட்டுள்ளார். 2019 தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் அவர் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 12, 2026

அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: கவுதமி

image

அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பு இல்லை என நடிகை கவுதமி கணித்துள்ளார். அதிமுக சார்பில் ராஜபாளையத்தில் போட்டியிட அவர் இன்று விருப்பமனு அளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவாழ்க்கையில் நமக்கு வரும் சவால்களை எப்படி சந்திக்கிறோம் என்பதை பொறுத்து தான் தலைமைத்துவம் கணிக்கப்படும் எனவும், விஜய்யின் இந்த அரசியல் பயணத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News January 12, 2026

BREAKING: ‘ஜன நாயகன்’.. விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி

image

<<18835502>>’ஜன நாயகன்’ தணிக்கை சான்றிதழ்<<>> விவகாரத்தில், படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், சென்சார் போர்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. <<18806489>>தணிக்கை சான்றிதழ் சிக்கல்<<>> தீரும் என எதிர்பார்த்த விஜய்க்கு, சென்சார் போர்டின் நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News January 12, 2026

தங்க மனசுக்காரருக்கு ₹1 லட்சம் வெகுமதி

image

குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த <<18834535>>தூய்மைப் பணியாளர் பத்மாவை<<>>, CM ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி வாழ்த்திய CM ஸ்டாலின், பரிசுத்தொகையாக ₹1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். ஏழ்மையில் இருந்தாலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத பத்மாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

error: Content is protected !!