News May 19, 2024

சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்

image

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

image

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.

News September 13, 2025

நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

image

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.

News September 13, 2025

Parenting: கர்ப்பிணிகள் செய்யவே கூடாத தவறுகள்

image

கர்ப்பகாலத்தில் பெண்கள் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த காலகட்டத்தில் சில தவறுகளை செய்தால் அது தாயையும், சேயையும் பாதிக்கலாம். ➤காபி, டீ-ஐ அதிகமாக அருந்தவேண்டாம் ➤மருத்துவரை கேட்காமல் மருந்துகளை எடுக்க வேண்டாம் ➤அதிகம் நேரம் நிற்காதீர்கள் ➤எதிர்மறையான விஷயங்களை யோசிக்கவோ, பேசவோ கூடாது ➤ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!