News May 19, 2024
சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
காஞ்சிபுரம்: கண் நோய்கள் குணமாக இங்க வழிபடுங்க!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க
News March 22, 2026
பெற்றோர்களே இந்த தவறுகளை செய்கிறீர்களா?

குழந்தைகள் மனம் மிகவும் மென்மையானது. நீங்கள் தெரியாமல் செய்யும் சில விஷயங்கள் கூட அவர்களை அதிகம் பாதிக்கலாம். ➤ஒரு பிள்ளைக்கு மட்டும் அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள் ➤எதிர்த்து பேசும் குழந்தைகளை அடக்க வேண்டாம். அமைதியாக சொல்லி புரிய வையுங்கள் ➤அவர்கள் செய்யும் தவறுகளை தண்டோரா போடாதீர்கள் ➤13 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். SHARE.
News March 22, 2026
நிர்வாகிகளை குஷிப்படுத்த விஜய் முடிவு

தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ம் தேதி மாமல்லபுரத்தில் 2000-க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய, நகராட்சி அளவிலான நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விஜய் போட்டோஷூட் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு நடக்கிறதாம்.


