News April 20, 2025

நாயகன் சூரிக்கு குவியும் பாராட்டு.. நெகிழ்ச்சியில் பதிவு

image

காமெடியனாக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் ‘மாமன்’ படம் மே 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே அவரது அடுத்த படமான மண்டாடியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூரி நன்றி தெரிவித்து X-ல் பதிவிட்டுள்ளார். அதில் விருப்பத்தை வெற்றிக்குச் சேர்க்கும் பாலம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு என சூரி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 23, 2025

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம்… ஐகோர்ட் அதிரடி

image

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டதாக எம். காமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் புகார் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

News December 23, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களின் உற்சாகத்துக்கு இன்று எல்லையே கிடையாது. ஏனென்றால், 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. நாளை (டிச.24) முதல் ஜன.4 வரை 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.5 அன்றே பள்ளிகள் திறக்கும். எனவே, விடுமுறையை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்காக <<18631046>>சிறப்பு<<>> பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News December 23, 2025

கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை நமஸ்கரித்து பின்னர், தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஆலய தரிசன விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.

error: Content is protected !!