News December 19, 2024
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: 3 பேர் பலி

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்த விபத்தில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News April 11, 2026
ஈரான் உச்ச தலைவருக்கு என்ன ஆச்சு?

ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி போரில் காயமடைந்ததாக கூறப்பட்டாலும், பொதுவெளியில் இதுவரை தென்படவில்லை. இது மர்மமாக இருந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு அவருக்கு முகத்திலும், காலிலும் காயம் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் அவர் முகத்தை வெளிக்காட்டாமல், போனில் `வாய்ஸ் கால்’ வழியாக மட்டுமே அரசுக்கும் ராணுவத்துக்கும் வழிகாட்டல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
News April 11, 2026
விஜய் நல்ல கணவனாக இருக்கணும்: நயினார்

திமுகவை ஜெயிக்க வைக்கவே விஜய் தனிக் கட்சி தொடங்கியிருப்பதாக நயினார் பேசியுள்ளார். விஜய் காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியது வேடிக்கையாக இருந்ததாக கூறிய அவர், திமுகவை ஓட்டுவதற்காக வராமல், சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 11, 2026
BREAKING: சந்தீப் மிட்டல் விடுவிப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை(DVAC) டிஜிபி பொறுப்பிலிருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்படுவதாக ECI அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஆயுதப்படை டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதனிடையே, RSS, பாஜகவின் ஆதரவாளராக இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என திமுகவின் TR பாலு, ECI-க்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


