News March 25, 2025
கோடையை சமாளிக்க சென்னையில் ஏசி ரயில்!

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது.
Similar News
News July 11, 2025
28 மாவட்டங்களில் நள்ளிரவு மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு ஒரு மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம், திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
News July 11, 2025
நயன்தாராவுக்கு விவாகரத்தா? இன்ஸ்டா போட்டோவில் பதில்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிய வேண்டும் என யாருக்கு ஆசையோ தெரியவில்லை. சமீபத்தில் இந்த விவாகரத்து புரளி காட்டுத்தீயாக சோஷியல் மீடியா தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒன்றை போட்டோவில் நயன் பதில் அளித்துள்ளார். விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, Our reaction when we see loopy news about us என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
News July 11, 2025
மினிமம் பேலன்ஸ் இல்லையா.. BOB வங்கியில் சலுகை

சாதாரண சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கவில்லையேல் பேங்க் ஆப் பரோடா (BOB ) அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், அந்த வங்கி தற்போது மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இனி கவலை கொள்ள வேண்டாம், அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் இது ப்ரீமியம் சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் BOB கூறியுள்ளது.