News December 5, 2024

பண்ட், ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அபிஷேக்

image

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்தில் சதமடித்து அசத்தினார். 144 ரன் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனர் அபிஷேக் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன்மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் பண்ட், ரோஹித் ஆகியோர் 3, 4வது இடத்தில் உள்ளனர்.

Similar News

News November 6, 2025

டாப் 10 அசுத்தமான நகரங்கள்.. தமிழ்நாடு நம்பர் 1

image

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

News November 6, 2025

ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

image

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

News November 6, 2025

பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்: ஸ்ருதி

image

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!