News December 5, 2024
பண்ட், ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய அபிஷேக்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்தில் சதமடித்து அசத்தினார். 144 ரன் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஓப்பனர் அபிஷேக் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன்மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் பண்ட், ரோஹித் ஆகியோர் 3, 4வது இடத்தில் உள்ளனர்.
Similar News
News November 19, 2025
SIR-க்காக மக்களுக்கு உதவி செய்ய குழு அமைத்த விஜய்

SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில். SIR தொடர்பாக பொதுமக்களுக்கு உதவ, தவெக சார்பில் 16 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்கும் விஜய், SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தவெக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கவுள்ளார்.
News November 19, 2025
சரிவில் பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கவலை!

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 84,641 புள்ளிகளிலும், நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 25,891 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, Bharti Airtel, HDFC Bank, Coal India, Jio Financial உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் பங்குகள் 4% – 6% வரை சரிந்துள்ளன.
News November 19, 2025
FLASH: சபரிமலை தரிசன முன்பதிவு மையம் மாற்றம்

பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் உடனடி தரிசன டிக்கெட் பதிவு மையமானது நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நேற்று நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது. காத்திருப்பு நேரம் 15 மணி நேரத்தை கடந்துள்ளது. மலையேற்றத்தின் போது <<18325487>>மூதாட்டி ஒருவர்<<>> உயிரிழந்தார். இதனால், முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இனி, நிலக்கல்லில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


