News April 27, 2024
அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்

அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதத்தில் இந்திய அணிக்காக விளையாட தயாராகிவிடுவார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். பவர்பிளேவில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இருப்பினும் இன்னும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை என்றார். மேலும், அவர் சரியான பயிற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் எளிதாக விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.
News November 17, 2025
விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.
News November 17, 2025
டிஜிட்டல் அரெஸ்ட்.. ₹31.8 கோடி அபேஸ்

பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ₹31.8 கோடியை இழந்துள்ளார். பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு கொரியர் வந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் ஒரு அழைப்பு வந்துள்ளது. பின்னர், தொடர்பில் வந்த குற்றவாளிகள், அவரை, தொடர்ந்து 6 மாத காலம் மிரட்டி, கொஞ்சம், கொஞ்சமாக பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பெண் புகார் அளித்த பின்னரே, மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


