News October 26, 2025
KKR அணிக்கு அபிஷேக் நாயர் பயிற்சியாளர்

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.
Similar News
News October 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 27, 2025
21 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் சரண்

சத்தீஸ்கரில் 13 பெண்கள் உள்பட 21 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு பணிகள் நடந்து வருவதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர்.
News October 27, 2025
அதிகமுறை விருது குவித்த இந்திய கிரிக்கெட்டர்கள்

அணிக்காக தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் பலர் உள்ளனர். இருப்பினும் அவர்களில் சிலர் மட்டுமே, அதிகமுறை தொடரின் நாயகன் விருதை வென்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். முதலிடத்தில் யார் என்று பார்த்து, கமெண்ட்ல சொல்லுங்க.


