News May 13, 2024

ஆந்திராவில் வாக்குச்சாவடி முகவர்கள் கடத்தல்?

image

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு புங்கனூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்களே கடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News September 9, 2025

இன்ஸ்டா சிறுவனுக்கு Thug கொடுத்த மாடல் அவந்திகா!

image

அவந்திகா மோகனின் இந்த ரிப்ளையை பார்த்த 90s-கிட்ஸ்கள், ‘தம்பி போய் படிக்கிற வேலைய பாருப்பா’ என கலாய்த்து வருகின்றனர். மாடலிங் கேர்ளான அவந்திகாவுக்கு 17 வயது சிறுவன் ஒருவன், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக இன்ஸ்டாவில் கேட்டுள்ளான். அதற்கு, ‘இப்போது நீ பரீட்சைகளை பற்றித்தான் கவலைப்பட வேண்டும், திருமணத்தை பற்றி அல்ல’ என அறிவுரை வழங்கியுள்ளார் அவந்திகா. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 9, 2025

சினிமாவின் உச்ச நட்சத்திரம் உதயநிதி: மா.சுப்பிரமணியன்

image

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், DCM உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, ‘திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக உள்ள நீங்கள் (உதயநிதி), விழா மேடையில் இருந்து இறங்கும்போது முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்’ என 2018-ல் தான் கூறியதாகவும், அவர் அதை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

News September 9, 2025

செங்கோட்டையன் வாழ்வில் செய்த முக்கிய தவறு!

image

அதிமுகவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்தும் செங்கோட்டையன் பக்கம் நிற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு அவரது கடந்த கால செயல்பாடுகளே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தலைமையிடம் விசுவாசமாக இருந்தாலும், நிர்வாகிகளிடம் அதனை அவர் காட்டவில்லையாம். அதோடு, 2017-ல் CM நாற்காலி அவரை தேடி வந்ததை தவற விட்டது பெரும் தவறு என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!