News April 13, 2024
நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய ஆம் ஆத்மி

உ.பி-யில் INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்றவும், எதேச்சதிகார அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய அவர், தங்களின் ஆதரவை அவரிடம் தெரிவித்தார். உபி-யில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
Similar News
News August 16, 2025
துணை ஜனாதிபதி: உத்தேச பட்டியலில் அண்ணாமலை?

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு வரும் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், JP நட்டா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லி கவர்னர் சக்சேனா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், Ex CM கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் பெரும் பட்டியலில் உள்ளதாம்.
News August 16, 2025
உத்தமர் என்றால் ஏன் பூட்டு போட்டீர்கள்? EPS தாக்கு

தலைமை செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டதை EPS விமர்சித்துள்ளார். உத்தமர் என கூறிக்கொள்ளும் நீங்கள், அறையை திறந்துவிடுங்கள் எனவும், எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று ED ரெய்டு நடத்தியது.
News August 16, 2025
மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!